October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவசரமாக நாடு திரும்பினார் அப்ரிடி

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைவரான சஹிட் அப்ரிடி அவசரமாக பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவசரமாக நாடு திரும்புவதாகவும் விரைவில் எல்.பி.எல் தொடரில் இணைந்துகொள்வதாகவும் அப்ரிடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சஹிட் அப்ரிடி ஏற்கனவே இலங்கை பயணத்தை தாமதமாகவே மேற்கொண்டிருந்தார். வீரர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய போதிலும் நவம்பர் 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்த அவருக்கு நவம்பர் 27 ஆம் திகதி காலி அணி விளையாடிய போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

அப்ரிடியின் தலைமையில் 3 போட்டிகளில் விளையாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி அந்த மூன்றிலுமே தோல்வியடைந்து கடைசி இடத்திலுள்ளது. இந்நிலையில் அப்ரிடி அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

இதனால் அப்ரிடிக்கு பதிலாக இளம் வீரரான பானுக ராஜபக்ஸ காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.