July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய- ஆஸி கிரிக்கெட் : ஜோ பேர்ன்ஸூடன் களமிறங்குவது மகிழ்ச்சி – டேவிட் வோனர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தம்முடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஜோ பேர்ன்ஸ் களமிறங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என அவுதிஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோனர் தெரிவிக்கிறார்.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் இந்நாட்களில் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஜோ பேர்ன்ஸூடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்குவதை தாம் அதிகம் விரும்புவதாக டேவிட் வோனர் தெரிவித்துள்ளார்.

ஜோ பேர்ன்ஸ் சிறந்த வீரர் எனவும், களமிறங்கிவிட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் திறன் அவருக்கு உள்ளது எனவும் டேவிட் வோனர் அவரைப் புகழ்ந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக ஜோ பேர்ன்ஸூடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி சிறப்பாக விளையாடியதை உணர்வதாகவும் ஒருவருக்கொருவர் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை நன்கு தெளிவுடன் ஆடும் ஆற்றல் தம்மிருவரிடையே இருப்பதாகவும் டேவிட் வோனர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், சரியான ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி யாரென்பதை அவுஸ்திரேலிய தெரிவுக்குழு தீர்மானிக்கும் என்றும் போட்டிக்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் டேவிட் வோனர் மேலும் கூறியுள்ளார்.