October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ரஜினியை அப்படி பேசியிருக்கக் கூடாது”: பாலாஜி வருத்தம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் நவம்பர் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தில் “அம்மனை ஓரம்கட்ட நினைக்கும் போலி சாமியாரை, தனது பக்தனுடன் சேர்ந்து அம்மன் எப்படி காலி செய்கிறார் என்பதை நகைச்சுவையான திரைப்படமாகக் கொடுக்க ஆர்.ஜே.பாலாஜி முயற்சி செய்திருக்கிறார்” என்கின்றனர்.

ரஜினிகாந்த் குறித்து வெளியான அறிக்கை; மறுப்பு வெளியிட்டுள்ள ரஜினி

இந்த நிலையில், நடிப்பதோடு என் வேலை முடிந்தது என்று படத்தின் எந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் நயன்தாரா பெட்டியைக் கட்டிவிடுவார் என்பதால், மூக்குத்தி அம்மனின் தேரினை ஆர்.ஜே.பாலாஜி ஒருவராகவே கட்டி இழுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

இரவு பகல் பாராமல் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் ஆர்.ஜே.பாலாஜி பதில் சொல்லிவருகிறார்.

எனினும், ஆர்.ஜே.பாலாஜியிடம் வம்பு வளர்க்கும் கேள்விகளையே ரசிகர்கள் கேட்டுவருகின்றனர்.

அப்படியொரு ரசிகர் கேட்ட கேள்வி தான் ஆர்.ஜே.பாலாஜியை தாவ வைத்தது.

ஆர்.ஜே.பாலாஜி வானொலியில் தொழில் புரிந்த காலத்தில் ஒரு பேட்டியின்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

ரஜினி வீட்டில் மலைபோல் குவியும் அஞ்சல் அட்டைகள் : அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் அழைப்பு

அதில் “ரஜினி எப்ப வருவாருன்னு அவருக்கே தெரியாது” என்று கூறி ரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

அந்த விஷயத்தைக் கொண்டு வந்து பாலாஜியிடம் கேட்டு “உங்களுக்கு ரஜினியைப் பிடிக்காதா?” என்று கேட்டிருக்கிறார் ஒரு ரசிகர்.

இதற்குப் பதிலளித்த பாலாஜி “ரஜினி மிகவும் அன்பான மனிதர். சின்ன வயசுல என் தாத்தா ரஜினி ரொம்ப நல்லவர்னு சொல்லியிருக்கார். அப்பவே அது என் மனசுல பதிஞ்சிருச்சு. ஆனால், நான் ஏன் ரஜினியை அப்படி பேசினேன் எனத் தெரியவில்லை.

நான் இந்த வீடியோவைப் பார்க்கும் போதெல்லாம் அவரிடம் மன்னிப்பு கேட்பது போல நினைத்துக்கொள்வேன்.

அவரைப் போல ஒரு நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது” என்று பாலாஜி சொன்ன பிறகே ரசிகர்கள் முற்றுகையைக் கலைத்தனர்.