October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலாவின் விடுதலைக்கு அனுமதி வழங்கியது புதுடில்லி?

சசிகலா தரப்பினருக்கும் பாஜக தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பமாக சசிகலாவை விடுதலை செய்வதற்கு பாஜக இணங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இருந்து கிடைத்த இந்த உற்சாகமான சமிக்ஞை காரணமாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கட்ட வேண்டிய அபராதத் தொகையான 30 கோடியை தயார் செய்யும் வேலையில் சசிகலா தரப்பு இறங்கியுள்ளது என தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 2017 பெப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா தனது தண்டனையின் மூன்று வருடங்கள் எட்டுமாத காலத்தினை பூர்த்தி செய்துள்ளதனால் அவர் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலையாவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.