July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் நடிக்க வரும் ‘புன்னகை இளவரசி’ சினேகா!

‘புன்னகை இளவரசி’ என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகை சினேகா மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் புது புது முகங்கள், கதாநாயகிகள் வந்தாலும் திருமணம் முடித்து சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகைகளான ஜோதிகா, சினேகா, சிம்ரன் போன்ற எவர்கிரீன் நடிகைகளுக்கும் என்றுமே மவுசு குறையாது.

இன்றளவும் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கையில் வைத்திருக்கும் நடிகை சினேகா ‘ஷாட் பூட் 3’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு நடிகையாகத் திரும்பியுள்ளார்.

‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘நிபுணன்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

முழுக்க முழுக்க குழந்தைகளைக் கொண்டு புதிய படமொன்றை ‘ஷாட் பூட் 3’ என்ற பெயரில் உருவாகுகிறது.

இந்தப் படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ட்ரெட்ண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

இதில் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் சினேகா இருவரும் கணவன் – மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பிறகு, திரையுலகிலிருந்து ஒதுங்கி இருந்த சினேகா சில காலம் படங்களில் நடிக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டார்.

இந்த புதிய படத்தில் வெங்கட் பிரபு – சினேகாவுடன் நிறைய குழந்தைகளும் நடிக்கவுள்ளனர். அவர்களுடன் யோகி பாபுவும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

திரையுலகிற்காக அருண் வைத்தியநாதன் எனப் பெயரை மாற்றியவர், தற்போது தனது நிஜப் பெயரான அருணாச்சலம் வைத்தியநாதன் என்றே பயன்படுத்துகிறார் இயக்குநர்.