![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/E5jbsfCWQAEajFM.jpg?fit=679%2C408&ssl=1)
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து புதிய இராணுவத் தளபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானின் 34 மாநிலங்களில் 10 மாநிலங்களை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
தலைநகருக்கு அண்மித்த நகரமான காஸ்னியை இன்று தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஜனாதிபதி அஷ்ரப் கானி வடக்கு நகரமான மசார் ஏ ஷெரீபுக்கு இடம்பெயர்ந்து, அரச சார்பு படைகளை அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.