July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் நுழைந்த ‘ஜர்வோ’ கைது!

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் நுழைந்த ‘ஜர்வோ 69’ எனும் டெனியல் ஜார்விஸ் லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் மைதானத்திற்கு சட்ட விரோதமாக நுழைந்த போதே, டெனியல் ஜார்விஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘ஜர்வோ 69’ எனும் டெனியல் ஜார்விஸ் இந்திய அணியினரைப் போன்று ஆடை அணிந்து நான்கு தடவைகள் மைதானத்தினுள் நுழைந்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர் ஜர்வோ மைதானத்திற்குள் நுழைந்து, செய்த சேட்டைகள் வைரல் ஆகியுள்ளன.

இந்நிலையில் நேற்று இங்கிலாந்து வீரர் ஒலி போப் துடுப்பெடுத்தாடும் போது, அவருக்கு ஜர்வோ பந்துவீச முயற்சித்துள்ளார்.

ஜர்வோரை மைதான பாதுகாப்பு பிரிவினர் தடுத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

https://twitter.com/CricketMate_/status/1431273657423204352?s=20