July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் கொரோனா மருந்திற்காக உலகம் காத்திருக்கிறது; இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்தியா குறைந்த விலையில் அனைவரும் பெறக்கூடிய கொரோனா வைரஸ் மருந்தினை உற்பத்தி செய்யும் என உலகம் எதிர்பார்த்துள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைவரும் பெறக்கூடிய மலிவான கொரோனா வைரஸ் மருந்தினை நாங்கள் உற்பத்தி செய்வோம் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐ.நா.விற்கு உறுதியளித்துள்ளார் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எனது சகாக்கள் பலருடன் நான் மேற்கொண்ட உரையாடல்களின் போது அவர்கள் இதற்காக காத்திருப்பது புலனாகியுள்ளது. நேபாளத்தை பூகம்பம் தாக்கியவேளையும்,யேமனின் உள்நாட்டு யுத்தத்தின் போதும் மொசாம்பிக்கின் சூறாவளியின் போதும் இலங்கையின் மண் சரிவின் போதும் இந்தியா கைகொடுத்துள்ளது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்