May 28, 2025 10:51:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நான்கு நாகை மீனவர்கள் கைதான நிலையில், மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.