July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்லை மோதல்கள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்; இந்திய முப்படை பிரதானி எச்சரிக்கை

எல்லை கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாற்றங்கள் மேற்கொள்வதை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள இந்தியாவின் முப்படை பிரதானி பிபின் ராவத், தூண்டுதல் அற்ற மூலோபாய மோதல்கள் பாரிய மோதல்களுக்கு வழிவகுக்கலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

எங்களின் நிலைப்பாடு தெளிவானது. எந்த குழப்பமும் இல்லாதது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் மாற்றங்களை மேற்கொள்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.எல்லை மோதல்கள் அத்துமீறல்கள் தூண்டப்படாத இராணுவ மோதல்கள் பாரிய மோதலாக மாறும் ஆபத்துள்ளதை நிராகரிக்க முடியாது.

லடாக்கின் கிழக்கு பகுதியில் நிலைமை இன்னமும் பதற்றமானதாகவே உள்ளது. இந்திய பாதுகாப்பு படையினர் வலுவான – உறுதியான பதில் நடவடிக்கைகள் காரணமாக சீன இராணுவம் அதன் தவறான முயற்சியின் எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்கின்றது.

இந்தியா எண்ணற்ற வெளிநாட்டு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.