July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜீவ் கொலை வழக்கு; 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் கடிதம்

(Photo:M.K.Stalin/ Facebook)

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தித் தமிழக ஆளுநருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அத்துடன், கடிதத்தின் நகலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

“மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் கீழான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவோ, தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” என, அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “ஏழு பேரை விடுதலை செய்யக் கோரும் மாநில அரசின் பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருப்பது சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.