October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீனவர் விவகாரம்: மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 21 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

திங்கட்கிழமை இரவு இலங்கையின் வடக்குக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இரண்டு படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதுகுறித்து, தமிழக முதல்வர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்தியா, இலங்கை மீனவா்களுக்கு இடையில் உள்ள நீண்டகாலப் பிரச்னையை நிரந்தரமாகத் தீா்க்க, உறுதியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்கள், 2 விசைப் படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.