June 17, 2025 18:50:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீனவர் விவகாரம்: தமிழக முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இந்திய மீனவர்களையும் வீடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.

2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்து அவர்களை, பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் முதல்வர் அந்தக் கடிதத்தின் ஊடாக கேட்டுக்கொண்டள்ளார்.

மேலும், இலங்கை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 75 மீன்பிடிப் படகுகளையும் மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வரவிருக்கிற பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்திடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குரிய உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்த வேண்டும் என்றும் முதல்வர் அந்தத் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.