இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நீதிமன்றமொன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குண்டுவெடிப்பா அல்லது வேறு ஏதும் நாசவேலையா என பஞ்சாப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.