![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/12/20211216_123603.jpg?fit=1024%2C709&ssl=1)
2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியுறும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய மம்தா பானர்ஜி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க நாடு முழுவதும் தோல்வியுறும் காட்சியை தான் பார்க்க விரும்புவதாகவும் தனது மாநிலமான மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி எவ்வாறு தோல்வியுற்றதோ, அதேபோல் நாடு முழுவதும் அந்த நிலையை சந்திக்கும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால் தனது மாநில மக்கள் பா.ஜ.கவினரை தோற்கடித்ததாகவும் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு வங்க மக்கள் சிந்தித்து செயல்பட்டதைப்போல் நாளை இந்தியாவும் சிந்தித்து செயல்படும் என அவர் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிப்போம் என மக்களிடம் உறுதி தெரிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.
நாடு முழுவதும் பா.ஜ.க தோற்பதை தான் காண விரும்புவதாக கூறியுள்ள மம்தா பானர்ஜி மீண்டும் பெரியதொரு விளையாட்டு நடைபெறும் என தெரிவித்திருக்கிறார்.