July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உருமாறிய கொரோனா; விழிப்புணர்வுடன் இருக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

உருமாறிய புதிய வகை கொரோனா குறித்து மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இந்தியா 150 கோடி டோஸ் தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய உருமாறிய கொரோனா குறித்து அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் நாடாளுமன்றத்தை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.