July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக மீனவர்களுக்கு இராமேஸ்வரம் மீன்வளத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

(file photo)

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அலுவலகத்தில் மீனவர்கள், மீன் வளத்துறையினர், கரையோர பொலிஸார் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800 க்கு அதிகமான விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.