July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக ஆளுநர் ரவி- இலங்கையின் துணைத் தூதுவர் வெங்கடேஸ்வரன் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் இந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் தமிழகத்துக்கு இடையேயான பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற விடயங்கள் தொடர்பாக இருவரும் கலந்தாலோசித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இலங்கையின் துணைத் தூதுவர் தமிழக ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி, சமீபகாலமாக முக்கிய அரசு தரப்பு அதிகாரிகளை சந்தித்து வருகிறார்.