July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியது

கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2 ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து மாயமானார்.

மாயமான மீனவரை கடந்த 4 நாட்களாக சக மீனவர்கள் தேடிவந்த நிலையில், இன்று (08) மதியம் குறித்த நபரின் சடலம் காரைநகர் கடற்கரையில் ஒதுக்கியுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.