இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட வெளிநாடுகள் அபகரிப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லடாக் மோதலால் இந்தியா-சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம், சிக்கிம் மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.
இதில் நேற்று டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள இராணுவத்தின் திரிசக்தி படைப்பிரிவு தளத்துக்கு சென்று பார்வையிட்ட அவர், அந்த வீரர்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
இந்த பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் எனவும், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் எவரும் எங்கள் நிலத்தின் ஒரு அங்குலத்தை கூட அபகரிக்க இந்திய இராணுவம் அனுமதிக்காது என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.