May 14, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் ஷாருக்கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கானின் வீட்டிலும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அதேபோல், ஹிந்தி நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,நேற்று ஆர்யன் கானின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும் பொலிவுட் நடிகருமான ஷாருக்கான் மும்பை ஆர்தர் சிறைக்குச் சென்று மகனை சந்தித்துள்ளார்.

இதனை அடுத்து மன்னத் பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டிலும்,இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு பிணை வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஷாருக்கானின் வீட்டில் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அது போலவே இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் சோதனை நடந்தது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வட்ஸ் அப் விவாதத்தில் அனன்யா பாண்டே பெயர் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே அவரின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாகவும் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கானின் மகன் உட்பட 20 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து மும்பை ஆர்தர் சிறையில் அடைத்துள்ளனர்.