July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைது முயற்சியின் போது படகு கவிழ்ந்து விபத்து: இந்திய மீனவரைக் காணவில்லை!

File Photo

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முயற்சித்த போது படகு கவிழ்ந்தில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த படகொன்றில் இருந்த மீனவர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்த நிலையில், அவர்களில் ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர் – கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்வதற்கு இலங்கைக் கடற்படையினர் முயன்ற போது குறித்த படகு கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வேளையில் படகில் இருந்த மூன்று மீனவர்களும் கடலில் மூழ்கிய நிலையில், அவர்களில் இருவரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

எனினும் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடி கடற்படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களும் காரைநகருக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.