July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 23 பேர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு படகுகளில் வந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான மீனவர்கள் படகுகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் நுழைந்த வேளை கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள்,கொரோனா பரிசோதனையின் பின்னர் காரைநகரில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டு 14 நாட்களின் பின்பே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்திய மீனவர்களின் தொடர் அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் 17ஆம் திகதி கடலில் இறங்கிப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்திய மீனவர் கைது படலம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.