![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/07/dora_vijay___Bm_LXuRFED9___.jpg?fit=1024%2C716&ssl=1)
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி பெற்றதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
அதில், 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கருபடித்தட்டை காந்தி நகர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் இயக்க நகர செயலர் பிரபு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.