July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பிரதமராவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை”

2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராகப் பதவியேற்ற போது, தான் இந்தியாவின் பிரதமராவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2001 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன்பின்னர் 13 ஆண்டுகள் அங்கு முதல்வராக அவர் பதவி வகித்தார்.

பின்னர் 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், பொது வாழ்க்கைக்கு பிரதமர் மோடி வந்து 20 ஆண்டுகளை நிறைவு பெறுவதையொட்டி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இது தொடர்பில் உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர்  உரையாற்றினார். இதன்போது இந்தியாவின் பிரதமராவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

பொது வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர்  மோடிக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பிரதமர் மோடியின் 20 ஆண்டு சாதனைகளைக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.