![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/nationalherald_2019-05_5317076d-c873-4fc0-a18b-ce729e7621e4_ModiRahul.jpg?fit=789%2C444&ssl=1)
லக்னோவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்தும் அநீதிகளை இழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 8 விவசாயிகள் பலியாகினர்.
இந்நிலையில், அங்கு விவசாயிகளை பார்க்கச் சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எந்த தலைவர்களுக்கும் அனுமதி வழங்கப்படாமல், திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மத்திய அரசு விவசாயிகளை அவமதிப்பது மட்டுமன்றி அவர்களை கொலை செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
லக்கிம்பூரில் சென்று விவசாயிகளை நேரில் சந்திக்க உள்ளதாக ராகுல் காந்தி அறிவித்திருந்த நிலையில், அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.