July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விரைவில் இலங்கை வருவேன்; சுப்பிரமணியன் சுவாமி தெரிவிப்பு

இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த தகவலை சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

புதிய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுடனான சந்திப்பில் காத்திரமான நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என தெரிவித்துள்ள அவர், நான் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு எனது அருமை நண்பர் ராஜபக்ஸ குடும்பத்தை சந்திக்கவுள்ளேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.