October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார் நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார்.

அண்மையில் முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய நிலையில், சித்துவும் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் சித்து.

பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளுக்குள் தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் பல முரண்பாடுகள் நிலவி வருகின்றது.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து கொடுத்து வந்த நெருக்கடி காரணமாக அண்மையில் மாநில முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார் எனக் கூறப்படுகிறது.

இருவருக்குமிடையிலான மோதல் போக்கு வெடித்ததையடுத்து, கட்சியில் சலசலப்பு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.