July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம்!

மத்திய அரசாங்கத்தின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாய விவசாய சங்கங்கள் இணைந்த ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவாசாயிகளுக்கு ஆதரவான அமைப்புகளும் ஆதரவளித்துள்ளன.

இதன்படி இந்தப் போராட்டம் பஞ்சாப், பீகார், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், மற்றும் வணிக நிறுவனங்களை மூடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்படி விவசாய சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதன்படி பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பல இடங்களில் விவசாயிகளின் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் வீதிகளில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இன்று காலை தொடங்கிய முழு அடைப்பு போராட்டம் மாலை 4 மணி வரையில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.