June 17, 2025 11:39:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்- இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐநா பேரவையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நியூயோர்க் சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இவர்கள் சந்தித்துக்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இருவரும் கொவிட் தடுப்பு, பருவநிலை மாற்றம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இன்று ஐநா பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.