
கேரளாவில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பாஜக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.ஜே. அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேநேரம், அடுத்த 5 – 10 ஆண்டுகளில் கேரளா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாற வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலாவில் கடந்த 9 ஆம் தேதியன்று ஒரு தேவாலயத்தில் பக்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளில் கேரளாவில் அதிகளவில் தலிபானேஷன் நடைபெறுவதாகவும், கேரள பாஜக பொதுச் செயலாளர் ஜார்ஜ் குரியன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கேரளாவின் ஜிஹாதி நடவடிக்கைகளைத் தடுக்க மத்திய அரசின் தலையீடு தேவை என்று கடிதம் எழுதியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் அல்லாத இளைஞர்களை சிக்க வைப்பதற்காக இஸ்லாமியக் குழுக்களால் நடத்தப்படும் பல்வேறு வகையான ஜிகாத் நடவடிக்கைகள் தொடர்பாக ரோமன் கத்தோலிக்க பிஷப் மார் ஜோசப் கல்லரங்கார்ட் கூறிய குற்றச்சாட்டுகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீவிரவாத அமைப்புகளுக்கான ஆட்சேர்ப்பு மையமாக கேரளா மாறி வருகிறது என்று சமீபத்தில் முன்னாள் பொலிஸ் தலைவர் லோக்நாத் பெஹ்ரா கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் இளம் பெண்கள் பெரும்பாலும் காதல் மற்று போதைப்பொருள் ஜிஹாத்துக்கு பலியாகி வருவதாக பிஷப் ஜோசப் கல்லரங்கட் குற்றஞ்சாட்டியுள்ளதை, கேஜே அல்போன்ஸ் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.