July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக தி.மு.க ஆட்சிதான் அமைந்திட வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக தி.மு.க ஆட்சிதான் நீடிக்க வேண்டும் என்ற வகையில் அனைத்து செயல்பாடுகளும் அமைந்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் வெறும் தொண்டனாக இருந்து உழைத்தவர்களால் தான் தி.மு.க ஆட்சியில் அமர்ந்திருக்கிறது என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15,தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17 என இம் மூன்று நிகழ்வையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந் நிகழ்வில் பேசிய தமிழக முதலமைச்சர்;

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக தி.மு.க ஆட்சிதான் என்னும் வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும்.கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே தி.மு.க ஆட்சிக்கு வந்து முப்பெரும் விழாவைக் கொண்டாடும் என்று கூறினேன். அதேபோல நிகழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் ஆறாவது முறையாக பொறுப்பேற்று அமர்ந்துள்ளது என பேசியுள்ள ஸ்டாலின், தொண்டர்களின் வியர்வையால்,ரத்தத்தால்,உழைப்பால்,தியாகத்தால் கிடைத்த வெற்றிதான் இந்த வெற்றி.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,எதைப் பற்றியும் கவலைப்படாமல் உழைத்த உழைப்பின் காரணமாகத்தான் தி.மு.க தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ளது என பெருமிதம் கூறியுள்ளார்.

நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான் நாம் என்று சொன்னார் அண்ணா.அந்த நீதிக்கட்சி 1921 இல் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தது.அந்த நூற்றாண்டையும் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்ட ஸ்டாலின், தான் முதன்முதலாக முதல்வராகப் பொறுப்பேற்றதும் இந்த ஆண்டுதான் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் .

தமிழ் நாட்டில் நிரந்தரமாக தி.மு.க ஆட்சிதான் என்னும் வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும் என தொண்டர்களிடையே வலியுறுத்தியுள்ளார் .

9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், அதன்பிறகு வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க 100 வீதம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ன ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.