உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் இந்தியா என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சுப்ரமணிய பாரதியார் பெயரில் காசியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுப்பிரமணிய பாரதியாரின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை நிறுவுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
இதேவேளை பாரதியாரின் பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவுகூர்கிறோம்’ எனவும் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்பெறுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/9SwEIfSwfB
— Narendra Modi (@narendramodi) September 11, 2021