![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/E-MHiL5UcAEyas0.jpg?fit=1024%2C440&ssl=1)
(Photo: Airports Authority of India/Twitter)
சென்னை- லண்டன் இடையே நேரடி பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா, பிரிட்டன் இடையே பயணிகள் விமான போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் திகதி நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையே ஏர்-பபுள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்த அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டன.
இதனையடுத்து சென்னையிலிருந்து லண்டனுக்கு நேரடியாக பயணிகள் விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தோடு அது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இரு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால், மீண்டும் சென்னை, லண்டன் நேரடி பயணிகள் விமான சேவை இன்று (02) முதல் தொடங்கப்படுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லண்டன் முதல் சென்னை வரையிலான நேரடி விமான சேவையானது, புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அதேநேரம், சென்னையிலிருந்து லண்டனுக்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் விமான சேவை இயக்கப்படும் என அறிவித்துள்ளது.