July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தான் விடயத்தில் இந்தியா உஷாராக இருக்கிறது என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

ஆப்கானிஸ்தானில் சூழ்நிலை மாறுபட்டுள்ளதால் இந்தியா உஷாராக இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொளி மூலம் பங்கேற்று பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமையை பயன்படுத்தி, இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் செயல்களை அனுமதிக்க போவதில்லை என்றும் எவ்வாறான சூழ்நிலை மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயார் நிலையில் இந்தியா இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் எவ்வாறான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறித்து ஜெர்மனி,கனடா,பிரிட்டன்,பிரான்ஸ் ,அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.