June 12, 2025 20:51:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 63 படகுகளை விடுவித்து தருவதாக தமிழக அரசு உறுதியளிப்பு

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 63 க்கும் மேற்பட்ட இயந்திர படகுகளை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

“இலங்கை அரசின் பாதுகாப்பில் தற்போது தமிழக மீனவர்கள் எவரும் இல்லை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 63 படகுகளை மீட்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.