
(FilePhoto)
பேரறிவாளன் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக பரோல் விடுப்பில் தனது தாய் வீட்டில் தங்கியிருக்கும் பேரறிவாளன் உடலில் உள்ள நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.
தற்போது இந்த பரோலுடன் நான்கு மாதங்கள் பரோல் விடுப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் பேரறிவாளன்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன்.
பேரறிவாளனுக்கு, 28ஆம் திகதியுடன் பரோல் முடிவடையும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பேரறிவாளனுக்கு இரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, மூட்டு வலி , கண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக அவருடைய தாயார் அற்புதம்மாள் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் பேரறிவாளனுக்கு நோய்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவரை உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என விழுப்புரம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் பரோலில் இருக்கும் பேரறிவாளன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதை ஏற்று பேரறிவாளன் பரோலை மேலும் ஒருமாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.