July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

9 வயது சிறுமியை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் டெல்லியில் 9 வயது சிறுமியை கற்பழித்து, கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

மரணங்களைத் தகனம் செய்யும் இடத்தில் உள்ள குளிர்நீர்க் குழாயில் நீர் எடுக்கச் சென்ற 9 வயது சிறுமி, கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.

நீர் எடுக்கச் சென்ற மகளை இந்து மதகுரு ஒருவர் உட்பட மூவர் தாக்கியதாக சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் உடலை தமது எதிர்ப்புக்கு மத்தியில் அதே தகன இடத்தில் எரிக்கப்பட்டதாகவும் தாம் அச்சுறுத்தப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களைக் கைது செய்துள்ள பொலிஸார், அவர்கள் மீது கூட்டு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தை 150 க்கு மேற்பட்ட கிராம மக்களைத் திரட்டிக்கொண்டு தகன இடத்துக்கு வரும் போது, சிறுமியின் உடல் எரிக்கப்பட்டு விட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.