July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்களால் தாக்கியதாக புகார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் விசைப்படகு மீனவர்களை கற்களால் தாக்கியும் வலைகளை அறுத்தெறிந்தும் இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததாக மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர்,கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அத்துடன் தமது வலைகளை வெட்டி வீசியதோடு மட்டுமல்லாது, வலைகளை எடுத்துச் சென்று விட்டதாகவும் மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வலைகளை வெட்டி அட்டூழியம் செய்து வருவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.