July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலாவின் தொடர் ஓடியோவால் சர்ச்சையில் அ.தி.மு.க!

(FilePhoto)

அண்மைக் காலமாக சசிகலா அ.தி.மு.க தொண்டர்களுடன் தொடர்ந்து பேசும் ஓடியோ வெளியிடப்பட்டு வருவதால் அ.தி.மு.க.வில் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே சசிகலாவுடன் பேசிய அ.தி.மு.க தொண்டர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், எதற்கும் தயங்காமல் மீண்டும் ,மீண்டும் சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஓடியோ வெளியாகி வருகிறது.

தற்போது சசிகலா பேசும் ஒரு ஓடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் அ.தி.மு.க.வை தான் ஆட்சி செய்வேன் எனவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் அ.தி.மு.கவை வழி நடத்துவேன் எனவும் அவர் பேசிய ஓடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குறித்த ஓடியோவில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க எப்படி இருந்ததோ அதேபோல் அந்த கட்சியை தான் வழி நடத்த உள்ளதாகவும், ஜெயலலிதாவின் தாயைவிட, அவரை அதிக நாட்கள் பாதுகாத்ததே தமது பாக்கியம் என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அ.தி.மு.க நிர்வாகியான தேனியை சேர்ந்த கர்ணன் என்பவருடன் சசிகலா இவ்வாறு பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது.

அந்த ஓடியோவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் சிறைக்கு செல்வதற்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி ஆட்சியை முறையாக அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்றதை சசிகலா சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தற்போது இந்த ஆடியோ அ.தி.மு.க வட்டாரத்தில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.