July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜம்மு காஷ்மீரில் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு மீட்பு

ஜம்மு-காஷ்மீர் விமானப்படைத் தளத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வெடி பொருட்கள் நிரப்பிய ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவென கூறப்படுகிறது.இதனை அடுத்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டாலும்,எதிர்பாராத நேரத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் விமானப்படை தளத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நார்வால் எனும் பகுதியிலிருந்து 4 கிலோ எடை கொண்ட நாட்டு வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.

நாட்டு வெடிகுண்டை வைத்திருந்த நதீம் உல் ஹக் என்ற 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த 4 கிலோ எடை கொண்ட நாட்டு வெடிகுண்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தாக்குதல் நடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பக் சிங் கூறியுள்ளார்.

விமானப் படைத்தளம் மீதான தாக்குதலை அடுத்து, நாட்டு வெடிகுண்டு அந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.