July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!

கொரோனா மரண எண்ணிக்கை

தமிழகத்திலும் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.

சென்னையை சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரளா, மகாராஷ்டிரா மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களிலும் நாற்பது பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

மிகவும் வீரியம் மிக்கதாக சொல்லப்படும் இந்த டெல்டா பிளஸ் வைரஸ் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழிக்கக் கூடியது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த டெல்டா பிளஸ் வைரஸ் தமிழ்நாட்டிலும் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கேரளா, மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதார பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.