July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அச்சுறுத்தும் டெல்டா பிளஸ் கொரோனா; இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம்!

இந்தியாவில் 2 வது கொரோனா அலையின் போது B.1.617.2 என்கிற உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.2 வது அலையின் போது டெல்டா வைரஸ் 70% தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரான்ஸ் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது இந்த B.1.617.2 என்கிற உருமாறிய டெல்டா கொரோனா மேலும் திரிபு அடைந்து டெல்டா பிளஸ் என்ற வைரஸாக மேலும் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறைவான எதிர்ப்பு திறனை கொடுப்பதாக,மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த டெல்டா வகை வைரஸ் பரவும் வேகம் 60 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பரவும் வேகம்,நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருக்குலைப்பது என டெல்டா பிளஸ் பரவுதல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா குடும்ப வைரஸ் மூலம் மூன்றாவது அலையின் பரவல் இருந்தால், இழப்புகள் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது .

டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக,ஒரு டோஸ் பைசர், கோவிஷீல்ட் செலுத்தியவர்களுக்கு , 33% எதிர்ப்பு திறன் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.