October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்; அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை!

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பேரறிவாளனை விடுவிக்கும் எண்ணத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது என அற்புதம்மாள் தெரிவித்திருக்கிறார்.

இதில் மிக முக்கியமாக நாளை  தமிழக முதலமைச்சர் டெல்லி சென்று இந்திய குடியரசு தலைவர் ,பிரதமர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

இந் நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரோல் நீட்டிப்பு குறித்து நேரில் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி அற்புதம்மாள் கோரிக்கை விடுத்து வருகிறார் .

இந்நிலையில் நாளை டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் இது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.