July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 30-ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14 ஆம் திகதி முடிவடையும் நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் பொது போக்குவரத்து மற்றும் வழிபாட்டு தலங்களில் பொது மக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் பதிவுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் அல்லது 10 நபர்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

27 மாவட்டங்களில் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொலைபேசி கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது .

பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைபயிற்சிக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள், பைக் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவல் அதிகமுள்ள சேலம், நாமக்கல்,ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி ,தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது .