June 16, 2025 20:00:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘5ஜி தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது’ என இந்திய செல்லுலர் ஒபரேட்டர்ஸ் தகவல்

5ஜி தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது என இந்திய செல்லுலர் ஒபரேட்டர்ஸ் அசோசியேஷனின் பொது இயக்குநர் எஸ். பி கோச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 5ஜி இணைய சேவையை கொண்டு வருவதன் வாயிலாக தற்போது இருக்கும் கதிர்வீச்சை விட 100 மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என பொலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இதன்போது, பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மனிதர்களை இது பேராபத்திற்கு இட்டுச்செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா வழக்கு தொடுத்திருந்தார்.

இதனையடுத்து, குறித்த நடிகையின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், 5ஜி தொழில்நுட்பம் ஆரோக்கிய சீர்கேடுகளை உருவாக்கும் என்பது தவறானது என நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

இதன் கதிர்வீச்சு பல்வேறு பாதகங்களை கொடுக்கும் என சிலர் தேவையற்ற கவலைகளை கொண்டுள்ளனர்.

இது மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக இந்திய செல்லுலர் ஒபரேட்டர்ஸ் அசோசியேஷனின் பொது இயக்குனர் கோச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவ்வாறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் போது, இது மாதிரியான வதந்திகளும் பரவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக பஞ்சாப்,ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவலுக்கு 5ஜி சோதனை ஓட்டம் காரணம் என தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.