July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பதற்காக சீரம் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனையடுத்து புனேவில் உள்ள அட்டாஸ்ஃபர் மையத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின் உரிமம் நீக்கப்படும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் தொற்று நோயியல் மற்றும் நுண் உயிரியலில் காமாலேயா ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்திருந்தது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சுமார் 92 வீதம் வரை தடுப்பாற்றலை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.