July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சசிகலா அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்’; எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சசிகலா

சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை எனவும் அவர் அமமுக தொண்டர்களுடன் தான் பேசி வருகிறார் எனவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக அலுவலகத்தில் சென்னை மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திடீர் கூட்டமொன்று இடம்பெற்றது.

தனக்கும் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை எனவும் அவர் புது வீட்டுக்கு இன்று சென்றுள்ளதால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியலில் இருந்து விலகியதாக ஊடகங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார்.அதனால் அவர் அதிமுகவில் இல்லை.

சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஓடியோதான் வெளியானதே தவிர அதிமுக தொண்டர்களுடன் பேசவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அத்தோடு அதிமுகவை எப்படியாவது கைப்பற்றும் முடிவில் சசிகலா இருக்கிறார். கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கும் பிளவை பயன்படுத்தி, மீண்டும் கட்சியை கட்டுப்படுத்தும் முடிவில் உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்க கூடாது, எனவும் முடிவை உடனே தெரிவித்தால் தான் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.