
‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசி ஏற்றும் முறையில் எந்த மாற்றமும் இல்லை என இந்தியாவின் நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய தடுப்பூசி செலுத்துதல் குழு தலைவருமான வைத்தியர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் சேரம் நிறுவனத்தின் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி ஒருவருக்கு இரண்டு டோஸ் அளவுகளில் செலுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை என அரசாங்க ஆலோசகர் வி. கே. பால் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கோவாக்சின் தடுப்பூசியும் ஒருவருக்கு இரண்டு டோஸ் அளவுகளுக்கு செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும் தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து தற்போது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.