February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேரளாவில் ஜூன் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கேரள மாநிலத்தில் ஜூன் மாதம் 9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நான்காவது முறையாக தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தொடர் ஊரடங்கு காரணமாக கேரள மாநிலத்தில் கொரோனா எண்ணிக்கை கட்டுக்குள் வர தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,318 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மிகக் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.